சென்னை வெள்ளம்: 2 லட்சம் பேரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்…!!

Read Time:1 Minute, 28 Second

c778c12c-3a6c-4f01-9505-7b8ce0b2ea6e_S_secvpfசென்னையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். இது பற்றி தீயணைப்புத் துறை இயக்குனர் ரமேஷ் குடவாலா கூறியதாவது:–

தீயணைப்பு வீரர்கள் 5 இணை இயக்குனர்கள், 5 துணை இயக்குனர்கள் மேற்பார்வையில் மீட்பு பணியில் இறங்கினார்கள்.

நவம்பர் 11 மற்றும் 12–ந் தேதி பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களில் 52 ஆயிரம் பேரை பத்திரமாக மீட்டார்கள்.

2–ம் கட்டமாக கடந்த 2–ந் தேதி முதல் 3–ந் தேதி வரை பெய்த பெருமழையில் சிக்கித் தவித்த சுமார் 2 லட்சம் பேரை மீட்டுள்ளார்கள்.

105 செல்லப் பிராணிகள் உள்ளிட்ட விலங்குகளையும் மீட்டனர்.

சேலம் தீயணைப்பு வீரர்கள், கே.கே.நகர் உதயம் தியேட்டர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை மீட்டு கே.கே.நகர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாறு அருகே தனியார் பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி…!!
Next post ஆம்பூர் அருகே கர்ப்பிணி பெண் மர்ம சாவு: கிணற்றில் பிணமாக மிதந்தார்..!!