பிறந்த பெண் குழந்தையை குளத்தில் வீசி கொன்ற கல்லூரி மாணவி…!!

Read Time:3 Minute, 27 Second

d2f6414e-63f8-4118-b1c5-e7de42807d57_S_secvpfதிருச்சி அருகே திருவெறும்பூர் கிளியூரைச் சேர்ந்த மதி என்ற ஆரோக்கியராஜ். ஊர் தலையாரியாக உள்ளார். இவரது மகள் நித்யரூபா (வயது 20). இவர் துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நித்யரூபா சேர்க்கப்பட்டார். அங்கு அவரிடம் ரத்தப்போக்கு பற்றி விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக கூறிய தகவலை தொடர்ந்து நவல்பட்டு போலீசாருக்கு தெரியப்படுத்தினார்கள்.

தகவலின் பேரில் மாணவி நித்யரூபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. துவாக்குடியில் கல்லூரியில் படித்து வந்த நித்யரூபா கிளியூரில் உள்ள ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் நித்யரூபா கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்ததும் வீட்டில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த செவ்வாய்கிழமை குண்டூர் அருகே அயன்புதூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு நித்யரூபா வந்துள்ளார்.

அங்கு தங்கியிருந்த நித்யரூபா அங்குள்ள குளக்கரைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது ரத்த போக்குடன் வந்துள்ளார். இதற்கு காரணம் குளக்கரையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த குழந்தையால் தனது வாழ்விற்கு சோகம் நேரிடும் என கருதிய நித்யரூபா அதனை குளத்தில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவல்பட்டில் உள்ள தைல மரக்காட்டில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த குழந்தை நித்யரூபா உடையதாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரிக்க சென்ற போலீசாருக்கு நித்ய ரூபாவின் சுய ரூப கதை தெரிய வந்தது. நித்யரூபாவிற்கு பெண் குழந்தை பிறந்ததை ஊர்ஜிதப்படுத்த குளத்துக்கு சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்த குழந்தையின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர்…!!
Next post 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் விளக்கமறியலில்..!!