15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் விளக்கமறியலில்..!!

Read Time:1 Minute, 38 Second

downloadதிருகோணமலை சூரியபுர பகுதியில் பதினைந்து வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.

சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டை பகுதியில் சந்தேகநபர் வசித்து வரும் நிலையில் பக்கத்து வீட்டு சிறுமியை அழைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

குறித்த சிறுமி பெற்றோர்களிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் சூரியபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறிவிக்கிரம அபேசேக்கர பண்டார (48) என்பவரை புதன்கிழமை (9) இரவு கைது செய்த சூரியபுர பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த பெண் குழந்தையை குளத்தில் வீசி கொன்ற கல்லூரி மாணவி…!!
Next post இத்தாலியில் விமானி இல்லாததால் முடங்கி கிடக்கும் பிரதமர் விமானம்..!!