திருமலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கோயமுத்தூரில் உயிருடன் உள்ளார்..!!
திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த வாகன சாரதி, கோயமுத்தூர் பகுதியில் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி நிலாவெளி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கி இருந்தது.
இந்த சடலம் தமிழகத்தைச் சேர்ந்த வாடகை வாகன சாரதியான பூமிதுரை என்று, சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையை கொண்டு உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் தமது பெயர் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டதை அறிந்த குறித்த நபர், காவற்துறையுடன் தொடர்பு கொண்டு தாம் உயிருடன் இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதேநேரம், தமிழக வாடகை வாகன சாரதிகள் சங்கத்தினால், இவ்வாறான அடையாள அட்டைகள் எவையும் வெளியிடப்படுவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating