புருண்டி நாட்டில் ராணுவம் தளம் மீது தாக்குதல்: 12 தீவிரவாதிகள் பலி…!!
Read Time:1 Minute, 22 Second
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புருண்டி நாட்டில் பியர்ரே குருன்சிஷா அதிபராக பதவி வகித்த வருகிறார். இங்கு பல தீவிரவாத குழுக்கள் உள்ளன.
இதனால் இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட புரட்சி முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தலைநகர் புஜும் புராவில் உள்ள ராணுவ தளம் மீது அதிகாலை சிந்துமுஜா தீவிரவாதிகள் புகுந்தனர்.
அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்ற முயற்சி செய்தனர். மேலும் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவிக்க முயன்றனர். அதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதனால் இரு தப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
அதில் 12 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating