குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது…!!
குரோஷியாவின் பிரபல மனித உரிமைகள் குழுவின் தலைவர் அந்நாட்டின் ஜனாதிபதி சகிதம் ஊடகவியலாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மேற்படி மனித உரிமைகள் குழுவின் தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்த சம்பவம் நேற்றுமுன் முன்தினம் இடம்பெற்றது.
நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, குரோஷியாவின் ஸக்ரெப் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் மனித உரிமைகளுக்கான குரோஷிய ஹெல்சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்குபற்றினார்.
இவ்வைபவத்தில் அந்நாட்டின் பெண் ஜனாதிபதியான கொலின்டா கிறபர் கிட்டரோவிக்கும் அதிதியாக கலந்துகொண்டார்.
ஜனாதிபதி கொலிண்டாவுடன் மேற்படி மனித உரிமைகள் குழுவின் அங்கத்தவர்கள் ஊடகவியலாளர்களுக் போஸ் கொடுத்தபோது அக்குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக்கின் காற்சட்டை திடீரென கழன்று அவரின் காலடியில் வீழ்ந்தது.
ஆனால், ஜனாதிபதி கொலின்டா கிறபர் கிட்டரோவிக் அதிக பிரதிபலிப்பு எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
அவரின் கையிலிருந்த பெரிய விருதொன்று ஐவன் சிகெக்கின் உள்ளாடைப் பகுதியை மறைக்க உதவியது.
மனித உரிமைகளுக்காக ஐவன் சிகெக் மேற்கொண்ட பணிகளை பாராட்டி அவருக்கு மேற்படி விருதை ஜனாதிபதி கொலின்டா கிறபர் கிட்டரோவிக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating