8 வயது சிறுமியை சீரழித்தவர் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை..!!
Read Time:1 Minute, 20 Second
தெற்கு டெல்லியில் உள்ள சன்லைட் காலனியில் சுமார் 62 வயது மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வசித்து வந்தார்.
தனது வீட்டில் குடியிருக்கும் தம்பதியரின் எட்டு வயது மகளை தனது அறைக்கு அழைத்துச் சென்ற அவர், சிறுமி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இதுதொடர்பாக பெற்றோரிடம் கூறியழுததை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் அந்நபரை தேடிவந்தபோது அவர் வீட்டில் இல்லை. இந்நிலையில், நேற்று மாலை தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் அருகே உடல் நசுங்கிய நிலையில் அந்த முதியவர் பிணமாக கிடந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Average Rating