அமெரிக்காவில் மசூதி மீது வெடிகுண்டு வீச்சு…!!
Read Time:1 Minute, 12 Second
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோயசெல்லா நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு மசூதியின் மீது மர்மகும்பல் ஒன்று வெடிகுண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டது.
அதைதொடர்ந்து அங்கிருந்து கரும்புகையும், தீப்பிழம்பும் வெளியேறியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எதற்காக அது நடந்தது என தெரியவில்லை.
சமீபத்தில் கலிபோர்னியா பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முஸ்லீம் தம்பதி 14 பேரை சுட்டுக் கொன்றனர். அவர்களை போலீசார் சுட்டு கொலை செய்தனர். அதன்பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மசூதி மீதுதான் குண்டு வீசப்பட்டது. அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Average Rating