கே.வி.குப்பம் அருகே ரெயிலில் அடிபட்டு 3 குழந்தை–தாய் பலி…!!
காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள கவசம்பட்டு ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தண்டவாளத்தில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். 4 பேரின் உடல்களும் சிதறிக்கிடந்தன.
இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கே.வி.குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். 3 பெண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் உடல் சிதறிக்கிடந்தனர்.
அவர்கள் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இறந்தவர்கள் தாய் மகன், மகள்கள் எனக்கூறப்படுகிறது. அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரெயில் மோதி இறந்தார்களா அல்லது ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating