கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு..!!
Read Time:55 Second
கல்முனை வட்டவிதானை வீதியில் வசித்து வந்த யோகலிங்கம் (62) என்பவர் இன்று காலை 10 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் ஏற்கனவே சுகவீனமுற்றவர் எனவும், இவரது மனைவி சுனாமியின் போது மரணமடைந்து விட்டதாகவும் அவர் தற்போது அவருடைய வீட்டிலே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கல்முனை பதில் நீதவான் பேரின்பராஜா சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating