திருச்சி போலீஸ் அதிகாரி செக்ஸ் டார்ச்சர்: பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணீர்..!!
திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் 20–க்கும் மேற்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையர் ஒருவர் போன் மூலம் அடிக்கடி ‘செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக தொடர்ந்த இந்த தொந்தரவை பெண் சப்–இன்ஸ்பெக்டர் பொறுமையாக சமாளித்து வந்துள்ளார். கடைசியில் நிலைமை மோசமாகவே தனது கணவரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் காவல்துறையிலேயே பெண்களுக்கு களங்கமா? என துடித்தார். இது குறித்து இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் செய்ய புறப்பட்டார்.
பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் புகார் கொடுக்க வரும் தகவல் அறிந்து ஏராளமான பத்திரிகையாளர்கள், டி.வி., கேமராமேன்கள் சுப்பிரமணியபுரத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.
ஆனால் பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் வரவில்லை. அவர் மதியத்திற்கு மேல் புகார் கொடுக்க வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர் விடுப்பில் சென்றுவிட்டார்.
பெண் சப்–இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரி தன்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசியது முழுவதையும் அவருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார். அதனை சி.டி.யாக தயாரித்து புகார் மனுவுடன் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் அளிக்க உள்ளார்.
சமீபத்தில் திருச்சி மாநகர போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் சிறந்த பணிக்கான பாராட்டு விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பெயர், படங்களுடன் ப்ளக்ஸ் பேனர் காவல்நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய போலீசார் பட்டியலில் தற்போது புகாருக்கு உள்ளான உதவி ஆணையரும், பாதிக்கப்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புகார் கொடுக்க முன்வந்துள்ள பெண் சப்–இன்ஸ்பெக்டர் தவிர, மேலும் 3 பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் இதே போன்று உயர் அதிகாரியின் டார்ச்சரால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பூனைக்கு யார் மணிகட்டுவது என்று பலர் யோசித்து கொண்டிருந்த நிலையில், அழகான பெயர் கொண்ட பெண் சப்–இன்ஸ்பெக்டரின் கணவர் துணிந்து புகார் கொடுத்துள்ளார்.
சென்னையில் உதவி ஆணையர் ஒருவர் பெண் ஏட்டுவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்று திருச்சியில் புகார் எழுந்திருப்பது காவல்துறையில் கண்ணியமிக்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating