காந்தி மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி: கல்லூரி மாணவர் கைது..!!
Read Time:1 Minute, 1 Second
கோட்டுர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர் சோமநாதன் (70). அடையாறு காந்தி மண்டபத்தில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்தார்.
இவரது வீட்டில் வெள்ளம் புகுந்ததால் காந்தி மண்டபத்தில் உள்ள முகாமில் தங்கி இருந்தார். அவர் இன்று தனது வீட்டை பார்த்து விட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி மண்டபம் அருகே ரோட்டை கடந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய வளசரவாக்கம் பெத்தானி நகரை சேர்ந்த பி.டெக் மாணவர் ஸ்டிபன் ராஜை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்.
Average Rating