அர்ஜென்டினாவில் போலீசார் சென்ற பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி…!!
Read Time:1 Minute, 24 Second
அர்ஜென்டினாவின் தலைநகர் புவனஸ் அயர்சுக்கு 932 கி.மீ வடக்குப்பகுதியில் உள்ள சால்டா நகருக்கருகில் 60 எல்லை பாதுகாப்பு படை போலீசாருடன் சென்ற பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து 50 அடி உயர பாலத்திலிருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 41 போலீசார் பலியாகினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மக்களால் (குறிப்பாக இரவு நேரத்தில்) புறக்கணிக்கப்படும் மோசமான சாலையில் பேருந்து பயணித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அர்ஜென்டின அதிபர் மவுரினா மக்ரி, நாம் நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தவிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
Average Rating