கண்டியில் பாடசாலை மாணவி கடத்தல்..!!
Read Time:1 Minute, 19 Second
கண்டியில் இன்று பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை பத்து மணியளவில் கண்டி மாநகரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேராதனை பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த சிறுமி இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ளார். கண்டி லும்பினி வித்தியாலய மத்திய நிலையத்தில் அவர் பரீட்சை எழுதியுள்ளார்.
இன்றும் வழமை போன்று பரீட்சைக்குச்சென்றிருந்த நிலையில் அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவிக்கு பதினாறு வயதுதான் நிரம்பியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டி பொலிஸ் நிலைய மகளிர் மற்றும் சிறுவர் பிரிவிற்கு இது சம்பந்தமாக கிடைத்துள்ள முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் மாணவியைத்தேடி தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
Average Rating