பக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி சாவு..!!

Read Time:1 Minute, 45 Second

downloadமேற்கு வங்காளத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பர்த்வான் நகரில் உள்ள ஷாகாரிபுகுர் பகுதியில் வசித்து வந்த அந்த சிறுமி நேற்று இரவு தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவளது பெற்றோர், உடல்நிலை சரியில்லாத மற்றொரு மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டில் வசித்து வரும் 27 வயது வாலிபர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அப்போது நாய் பலமாக குரைத்து உள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது சிறுமி வீட்டிற்கு பின்புறம் ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். உடனடியாக அவர்கள், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரங்கத்தையே அதிர வைத்த அதிசயங்கள்…!!
Next post கிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..!!