23 வருடம் பாதுகாக்கப்பட்ட விந்தணு மூலம் பிறந்த குழந்தை…!!
“அலெக்ஸ்…. நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்…” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக நம்பிய அலெக்ஸ் பவல், தனது விந்தணுவை விந்து வங்கி ஒன்றில் சேமித்து வைத்தார்.
கேன்சர் சிகிச்சையிலிருந்து மீண்ட அலெக்சுக்கு திருமணமும் நடந்தது. குழந்தை ஆசையில் அலெக்சும் அவரது மனைவியும் பிரபல செயற்கை கருத்தரிப்பு முறையான IVF சிகிச்சை முறை மூலம் கடந்த 2013-ம் ஆண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்தனர். சிகிச்சை மேற்கொண்ட ஒரு வருடத்திலேயே கருத்தரிப்பு ஏற்பட்ட அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 17-ம் திகதி சேவியர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இதன் மூலமாக 23 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட விந்தணுவின் மூலம் பிறந்தவர் என்ற சாதனையை குட்டிப்பையன் சேவியரும் அதன் சொந்தக்காரர் என்ற சாதனையை அலெக்சும் படைக்கவுள்ளனர். இதற்கு முன்பாக 21 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட விந்தணு மூலமாக குழந்தை பிறந்ததே கின்னஸ் சாதனைப்புத்தகத்தின் உச்சகட்ட சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating