முச்சக்கர வண்டியில் பயணித்த 17 வயது இளைஞன் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 37 Second

1340619963Autoஇறம்பொடை பகுதியில் இன்று (16.12.2015) காலை 11.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாது,

முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 17 வயதுடைய மொகமட் நிஸ்ராஸ் என்ற வாலிபரே உயிரிழந்துள்ளார்.

இவருடன் பயணித்த இரு சிறுவர்களும், ஒரு பெண் மற்றும் சாரதி ஆகியோர் காயத்திற்கு உள்ளான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவனெல்லையில் இருந்து மரண வீடு ஒன்றிற்கு வெலிமடை நோக்கி சென்று மீண்டும் மாவனெல்லை திரும்பி செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்..!!
Next post கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!