நமீதாவிடம் ரசிகர்கள் சில்மிஷம்

Read Time:2 Minute, 18 Second

namitha09.jpgஇலங்கையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகை நமீதாவிடம் அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் நமீதாவை காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்றனர். இலங்கையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மனநலம் குன்றிய குழந்தைகள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோரை பேணிக் காப்பதில் அந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தொண்டு நிறுவனமானது நிதி திரட்டுவது தொடர்பாக கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக தமிழகத்தில் இருந்து நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதற்காக நேற்று முன்தினம் நமீதா விமானம் மூலம் இலங்கை சென்றார். இரவு 8 மணியளவில் கலை நிகழ்ச்சி நடக்கும் மேடைக்கு அவர் சென்றார். ஒருசில தமிழ்ப்பாடல்களுக்கு நமீதா கவர்ச்சி நடனமாடினார். அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த ரசிகர்கள், “நமீதா நாங்கள் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறோம்’ என்று கத்தி கலாட்டா செய்தனர். இதனால் நமீதாவின் ஆட்டம் தடைபட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மேடை அருகே வந்தனர்.

ஒருசிலர் நமீதாவை தொட்டு பார்க்க முயற்சி செய்தனர். இதனால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கமாண்டோ வீரர்கள் விரைந்து வந்து நமீதாவை ரசிகர்களின் பிடியில் இருந்து காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

namitha09.jpgnamitha0.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
Next post சிறையிலிருந்து சஞ்சய் தத் இன்று விடுதலை