மருத்துவமனையில் புதுமுக நடிகை சங்கீதா
கடந்த 6 நாட்களில் 5 முறை போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பி ஓடிய புதுமுக நடிகை சங்கீதா புதுவண்ணாரப் பேட்டை போலீசிடம் பிடிபட்டார். அளவுக்கு அதிகமான போதையில் இருந்த நடிகை சங்கீதா, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடபழநி நூறடி சாலையில் வசித்து வந்த அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக அறிமுக நடிகை சங்கீதா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், ஜாமீனில் வெளி வந்து கொடுங்கையூரில் வசித்து வந்தார். கடந்த 23ம் தேதி புது வண்ணாரப் பேட்டையில் சினிமா தியேட்டர் அருகே நடுரோட்டில் சங்கீதா போதையில் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரோந்து போலீசார் சங்கீதாவை படித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சங்கீதா தப்பி ஓடினார். பின்னர், வியாசர்பாடி அருகே சத்திய மூர்த்தி நகரில் சாலையோரத்தில் போதையில் சங்கீதா படுத்திருந்தார். பொது மக்கள் அனைவரும் தன்னை வேடிக்கை பார்ப்பதை பார்த்த சங்கீதா போலீசார் வருவதற்கு முன்னர் அங்கிருந்து தப்பியோடினார்.
ராயபுரம் மணிகூண்டு அருகே ஆட்டோ டிரைவருடன் தகராறில் ஈடுபட்ட போதையில் இருந்த சங்கீதாவை போலீசார் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். 2 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கீதா நேற்றுமுன்தினம் இரவு திடீரென மாயமானார். ஆஸ்பத்திரி வளாக போலீசார் சங்கீதாவை அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அவர் காணவில்லை.
இந்நிலையில், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோயில் பிரகாரத்தில் போதையில் சங்கீதா படுத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொது மக்கள் கோயிலில் ஒரு பெண் குடித்து விட்டு விழுந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அப்போது போதை தெளிந்து எழுந்த சங்கீதா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்நிலையில், புதுவண்ணாரப் பேட்டை டி.எச். சாலை ஓரத்தில் போதையில் நடிகை சங்கீதா விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் புது வண்ண்õரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், சங்கீதாவை பிடித்து அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
கடந்த ஒருவார காலமாக எந்நேரமும் போதையில் இருந்த சங்கீதா தீவிர சிகிக்கைப்பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.