யுவதி கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு…!!
கண்டி பிரதேசத்தில் யுவதி ஒருவரை கடத் திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அவரது நகைகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த யுவதி கடந்த 12 ஆம் திகதி பகல் தென்னகும்புர பாலத்துக்கு அருகில் தனது நண்பர் ஒருவர் ஒருவரை எதிர்பார்தது நின்றிருந்த போதே முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு குண்டசாலை பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றினுள் வைத்து நால்வரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடத்தப்பட்ட தினம் நள்ளிரவு 12 மணிவரை தன்னை துஷ்பிரயோகத்து உள்ளாக்கியதுடன் பின்னர் தனது இருப்பிடம் தொடர்பில் விசாரித்து கண்டியிலுள்ள தனது வீட்டின் முற்றத்தில் விடுவித்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் வீட்டாரிடம் தெரிவித்ததன் பின்னர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் குறித்த யுவதி அணிந்திருந்த ரூபா ஒரு இலட்சத்துக்கு அதிகமான பெறுமதியுடைய தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் கண்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating