யுவதி கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு…!!

Read Time:2 Minute, 33 Second

13729_shaகண்டி பிர­தே­சத்தில் யுவதி ஒரு­வரை கடத் திச் சென்று கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய பின்னர் அவ­ரது நகை­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தேக நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைதான சந்­தேக நபர் இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஒருவர் என விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த யுவதி கடந்த 12 ஆம் திகதி பகல் தென்­ன­கும்­புர பாலத்­துக்கு அருகில் தனது நண்பர் ஒருவர் ஒரு­வரை எதிர்­பார்­தது நின்­றி­ருந்த போதே முச்­சக்­கர வண்­டியில் கடத்திச் செல்­லப்­பட்டு குண்­ட­சாலை பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த வீடொன்­றினுள் வைத்து நால்­வரால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் கடத்­தப்­பட்ட தினம் நள்­ளி­ரவு 12 மணி­வரை தன்னை துஷ்­பி­ர­யோ­கத்து உள்­ளாக்­கி­ய­துடன் பின்னர் தனது இருப்­பிடம் தொடர்பில் விசா­ரித்து கண்­டி­யி­லுள்ள தனது வீட்டின் முற்­றத்தில் விடு­வித்து சென்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.

தனக்கு நிகழ்ந்த சம்­பவம் தொடர்பில் வீட்­டா­ரிடம் தெரி­வித்­ததன் பின்னர் அவரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இதே­வேளை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யதன் பின்னர் குறித்த யுவதி அணிந்­தி­ருந்த ரூபா ஒரு இலட்­சத்­துக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய தங்க ஆப­ர­ணங்­க­ளையும் கொள்­ளை­யிட்­டுள்­ள­தாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யும் நோக்கில் கண்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 நிமிட வீடியோ! ஆனால்….!!
Next post அவுஸ்திரேலிய பிரஜையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது..!!