அருப்புக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து ஆந்திரா அய்யப்ப பக்தர்கள் 8 பேர் காயம்..!!
ஆந்திராவை சேர்ந்த வெங்கிடேஸ்வராரெட்டி (வயது 46), ரஞ்சித் (19), ரவி (32) உள்பட 8 பேர் ஒரு காரில் அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பினர்
வரும் வழியில் மதுரை வந்த அவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
அருப்புக்கோட்டை அருகே காந்தி நகரில் உள்ள பாலத்தில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த போது சுவரில் கார் மோதி கவிழ்ந்தது.
இதனால் காரில் இருந்த 8 பேரும் காயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஸ்வரா ரெட்டி, ரவி, ரஞ்சித் ஆகிய 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating