பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இன்று முதலாண்டு நினைவுநாள் அனுசரிப்பு..!!
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அதிரடியாக புகுந்த தலிபான் தீவிரவாதிகள், 136 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதலையடுத்து, தீவிரவாதிகளின் முகாம்கள்மீது மும்முரமாக வேட்டையாட தொடங்கிய பாகிஸ்தான் ராணுவம் ஒரே ஆண்டில் சுமார் 3,400 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் எடுக்க தொடங்கியது.
இந்நிலையில், இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் பல பகுதிகளில் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பெஷாவர் நகரில் இந்த தாக்குதலில் பலியான மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் பலியானவர்களின் புகைப்படங்களுடன் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
Average Rating