குழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..!!
கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பால் வியாபாரி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு அகிலேஷ் (3½) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சுகன்யாவுக்கு கடந்த 23 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தைகளுடன் சுகன்யா சிங்காநல்லூர் தண்ணீர் பந்தல் வீதி எஸ்.எம்.எஸ். லே–அவுட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை தொட்டிலில் தூங்கிய குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக சுகன்யா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை கொலை செய்யப்பட்டு அதன் உடல் வீட்டுக்குள் உள்ள தண்ணீர் பக்கெட்டில் போடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து குழந்தையின் தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையின் தாய் சுகன்யா முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சுகன்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சுகன்யா குழந்தையை கொலை செய்ததாக கூறினார்.
பின்னர் தனது 3½ வயது மகன் அகிலேஷ் பெண் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார். இதனால் கொலையில் மர்மம் நீடித்தது.
இது குறித்து போலீசார் கூறும்போது பெண்குழந்தை கொலை வழக்கு தொடர்பாக குழந்தையின் தாய் சுகன்யா மற்றும் பாட்டி முத்துலட்சுமி ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினோம். அப்போது முத்துலட்சுமி தன் மகனை காப்பாற்ற கொலைப்பழியை முதலில் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் நடத்திய விசாரணையில் சிறுவன் அகிலேஷ் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் விளையாட்டாக பிறந்த குழந்தையை தண்ணீர் பக்கெட்டில் ஒளித்து வைத்து உள்ளான். இதனால் மூச்சு திணறி குழந்தை இறந்தது தெரிய வந்தது.
தற்போது சிறுவன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளோம். ஆனால் அவனுக்கு 3½ வயதே ஆவதால் அவனை கைது செய்ய இயலாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating