வவுனியா கற்குழியில் துணிகர திருட்டு..!!
Read Time:1 Minute, 22 Second
வவுனியா, கற்குழி பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செவ்வாய்கிழமை இரவு வீட்டில் மதிலின் ஊடாக நுழைந்த திருடர்கள் வீட்டு யன்னல் ஊடாக வீட்டு அறைக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் உட்பட சுமார் நான்கு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியாவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating