15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்..!!
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், குறித்த சிறுமி கல்வி பயிலும் அதே பாடசாலையில் காவலாளியா கடமையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் வகுப்பில் கல்வி பயின்று வரும் 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த திங்கட்கிழமை பலவந்தமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்லப்பட்டு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தை அவதானித்த கிராம மக்கள் அந்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே குச்சவெளி பொலிஸார் அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தியபோது நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating