முள்ளிவாய்க்கால் மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

Read Time:2 Minute, 0 Second

mullaitheevu_ (3)முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (வயது 26) எனும் இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆரியரத்னா வசந்தன் (வயது 20) எனும் இளைஞர் படுகாயமடைந்தவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் புதன்கிழமை இரவு 7மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வீதியில் நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கட்டாக்காலி மாட்டின் மீது மோட்டார் சைக்கில் மோதியதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கில் தீப்பற்றி எரிந்ததாகவூம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்..!!
Next post திகைக்க வைக்கும் விசித்திர மருத்துவ சிகிச்சைகள்…!!