ரஷ்ய நகர மேயராக பூனையை நியமிக்க விரும்பும் மக்கள்…!!
ரஷ்ய நகரமொன்றைச் சேர்ந்த மக்கள் பூனையொன்று தமது நகரின் மேயராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர். ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தைச் சேர்ந்த பார்னோல் எனும் நகர மக்களே இவ்விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
அந்நகரிலுள்ள மக்கள் நீண்டகாலமாக அரசியல்வாதிகளின் ஊழல்கள் தொடர்பாக அதிருப்தியுற்றுள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து 3,600 கிலோமீற்றர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. சுமார் 7 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய சமூக வலைத்தளமொன்றினால் நடத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாக்கெடுப்பொன்றில் மேயராக பூனையை நியமிப்பதற்கு அதிக எண்ணிக்கையானோர் வாக்களித்துள்ளனர்.
18 மாத வயதான பார்ஸிக் எனும் பூனையை மேயராக நியமிக்க வேண்டும் என பார்னோல் நகரில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் செய்வாய்க்கிழமை வரை மேற்படி உத்தியோகபூர்வமற்ற வாக்களிப்பில் பங்கபற்றிய 5,400 பேரில் சுமார் 91 சதவீதமானோர் மேற்படி பூனைக்கு வாக்களித்துள்ளனர்.
“யாரை நம்புவது என மக்களுக்குப் புரியவில்லை. அதனால்தான் இப்பூனை பிரபலமாகியுள்ளது” என உள்ளூர் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Average Rating