மாப்பிள்ளை மாயம்
திருவல்லிக்கேணியில் நடை பெறவிருந்த திருமணம், மாப்பிள்ளை திடீரென மாயமானதால் நின்றது. மணமகள் பெயர் ஷாலினி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திருவல்லிக் கேணியை சேர்ந்த இவர் அதே பகுதியில் வசிக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகர் (வயது 25) என்ற சாஃப்ட்வேர் பொறியாளரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனராம். இது அவர்களு டைய குடும்பத்தினருக்கு தெரிய வரவே, ஊரறிய திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு திருமண மண்டபத் தில் நடை பெறு வதாக இருந்தது. இந்த நிலையில், மாப்பிள்ளை பிரபாகர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் மாயமான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் என்பதால் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.