கொளத்தூரில் பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது…!!
Read Time:1 Minute, 12 Second
கொளத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது48). விதவைப் பெண்.
பிளாட்பாரத்தில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 21–ந்தேதி அதே பகுதி அய்யப்பன் நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கோவிந்தம்மாளை அதே பகுதியில் பிளாட்பாரத்தில் வசித்து வந்த கள்ளக்காதலன் மகேந்திரன் கொலை செய்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து மகேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கூறும்போது, ‘‘கோவிந்தம்மாள் என்னை பிரிந்து வேறு ஒருவருடன் பழகினார். இதனை நான் கண்டித்தும் கேட்கவில்லை. எனவே கடந்த 21–ந்தேதி தனியாக அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்றேன்’’ என்று கூறினார்.
Average Rating