அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது..!!

Read Time:2 Minute, 22 Second

1450337585_9298765_hirunews_suicideasவீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்­லா­வெளியில் இடம்பெற்றுள்ளது.

அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியின் மரண விசாரணையின் போது அவரது தாயார் அளித்த சாட்சியம் வருமாறு

” ஏன் வாந்தி எடுக்­கிறாய் எனக் கேட்டேன். ஒன்றும் இல்லைஎன்றாள். வற்புறுத்திக் கேட்ட போது மூன்று அலரி விதை சாப்­பிட்டேன் என்றார். எதற்­காக இப்­படிச் செய்தாய் எனக் கேட்ட போது விளை­யாட்­டா­கவே சாப்­பிட்­ட­தாக கூறினார். கணவர் வெளி­நாடு சென்று விட்டார். இறந்­தவர் எனது மகள். அவர் க.பொ.த. சாதா­ரண தர வகுப்­பு­வரை படித்து விட்டு வீட்டில் இருக்­கிறார். அவ­ருக்­காக ஒரு வீடு கட்­டு­கின்றோம். இதன் செல­வுக்­காக அவளின் தங்க சங்கிலியை வாங்கி அடகு வைத்து பணம் பெற்றேன்.

அதனை மீட்­டுத்­த­ரு­மாறு இரண்டு மாதத்­துக்கு முன்­னரும் சண்­டை­யிட்டார். சங்கிலியைக் கேட்டு அதன்­ பின்­னரும் கேட்டு வந்தார். இறு­தி­யாக சம்­ப­வ­தினம் நண்­பகல் சங்கிலியைக் கேட்டு சண்­டை­பி­டித்தார். அப்பா அனுப்பும் காசை என்ன செய்­கிறாய் என்று சண்டையிட்டார்.மறுநாள் காலையில் தான் வாந்தி எடுத்தார். உட­ன­டி­யாக எகளு­வாஞ்­சிக்­குடி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்.

பின்னர் அவர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் போது மறுநாள் மர­ண­மானார்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் இருந்து உயிர் தப்பிய தாயும் , 3 குழந்தைகளும்…!!
Next post குழந்தை கொலை வழக்கில் திருப்பம்: 3½ வயது சிறுவன் மீது வழக்கு..!!