மதுரையில் இறந்த கணவர் பிணத்துடன் 3 நாள் வசித்த மனைவி..!!

Read Time:2 Minute, 36 Second

imagesமதுரை சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது61). இவரது மனைவி நாகேஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (35), பிளக்ஸ் போர்டு கட்டும் தொழில் செய்து வருகிறார். மணிகண்டன் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். தாய்–தந்தை இருவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மணிகண்டன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மாலையில் வீட்டிற்கு வந்தபோது தந்தை வசித்து வரும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மணிகண்டன் தன் தந்தை வீட்டிற்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது நடராஜனின் பிணம் அழுகிய நிலையில் கட்டிலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலேயே தாய் நாகேஸ்வரியும் இருந்துள்ளார்.

இது குறித்து தாய் நாகேஸ்வரியிடம் கேட்ட போது சரியாக பதில் சொல்லவில்லை.

இது பற்றி ஜெய்ஹிந்த் புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் நடராஜர் குடிப்பழக்கம் உள்ளவர். அவரது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பே நடராஜன் இறந்துள்ளார். அதுபற்றி யாரிடமும் தெரிவிக்காமல் நாகேஸ்வரி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் கணவன் இறந்தது கூட தெரியாமல் பிணத்துடன் இருந்துள்ளதாக தெரிகிறது.

துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனுக்கு தெரிவித்துள்ளனர். அவர் சென்று பார்த்தபோது தன் தந்தை இறந்து பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. நடராஜன் இறந்தது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பரம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மகள் கடத்தல்: மர்ம நபர்கள் அடைத்து வைத்திருப்பதாக போனில் கதறல்..!!
Next post மதனப்பள்ளி அருகே மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை..!!