மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது! ஒருவர் உயிரிழப்பு: மற்றவர் பலத்த காயம்…!!

Read Time:2 Minute, 27 Second

images (2)முல்­லைத்­தீவு முள்­ளி­வா­ய்க்காலில் புதன்­கி­ழமை இரவு ஏற்­பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மற்­று­மொ­ருவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் மாஞ்­சோலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார் எனவும் முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­தனர்.

முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த தர்­ம­லிங்கம் தினேஸ்­வரன் (26) எனும் இளை­ஞனே இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

குறித்த இரு இளை­ஞர்­களும் சம்­பவ தின­மி­ரவு இரவு 7 மணியளவில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­தி­லி­ருந்து முல்­லைத்­தீவு நோக்கி சென்று கொண்­டி­ருந்த போது முள்­ளி­வாய்க்கால் பிர­தே­சத்தில் வீதியில் தரித்து நின்ற கட்­டாக்­காலி மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி­யதில் இவ்­வி­பத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

விபத்துச் சம்வம் இடம்­பெற்ற இடத்­திற்கு அரு­கா­மையில் கட­மை­யி­லி­ருந்த கடற்­ப­டை­யினர் பொது­மக்­களின் உத­வி­யு­டனும் காயப்­பட்ட இரு­வ­ரையும் முல்­லைத்­தீவு மாஞ்­சோலை மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர்.

அத்­துடன், குறித்த இளை­ஞர்கள் பய­ணித்த மோட்­டார் சைக்கிள் விபத்­தி­னை­ய­டுத்து திடீ­ரென தீப்­பற்றி எரிய ஆரம்­பித்­துள்­ளது.

சுமார் 15 நிமி­டங்கள் வரை மோட் டார் சைக்கில் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது.

இதேவேளை, குறித்த இரு இளைஞர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மாடு உயிர்தப்பியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை மரணம் தொடர்பில் பெண்ணொருவர் கைதானார்..!!
Next post மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் பத்து உடல்நல அபாயங்கள்…!!