மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது! ஒருவர் உயிரிழப்பு: மற்றவர் பலத்த காயம்…!!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் தினேஸ்வரன் (26) எனும் இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு இளைஞர்களும் சம்பவ தினமிரவு இரவு 7 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வீதியில் தரித்து நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்வம் இடம்பெற்ற இடத்திற்கு அருகாமையில் கடமையிலிருந்த கடற்படையினர் பொதுமக்களின் உதவியுடனும் காயப்பட்ட இருவரையும் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அத்துடன், குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தினையடுத்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் வரை மோட் டார் சைக்கில் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது.
இதேவேளை, குறித்த இரு இளைஞர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மாடு உயிர்தப்பியது.
Average Rating