பள்ளிக்கரணையில் பாதிரியாரை வெட்டிய 4 பேர் கைது…!!
Read Time:1 Minute, 0 Second
மடிப்பாக்கம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஐசக் (வயது50). கிறிஸ்தவ பாதிரியார். இவர் கடந்த 10–ந்தேதி பள்ளிக்கரணை வழியாக சென்றபோது 4 பேர் அவரை கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். படுகாயம் அடைந்த ஐசக் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐசக்கின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தி அந்த போனை பயன்படுத்திய பள்ளிக்கரணை வைரவ நகரைச் சேர்ந்த வசந்த் (22) என்பவனை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் சிவப்பிரகாசம், ஜெயக்கண்ணன் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
Average Rating