அதானி குழு அதிகாரிக்கு கொலைமிரட்டல்: தந்தை–மகன்கள் கைது…!!

Read Time:1 Minute, 47 Second

74dc2dc4-3bac-4a0d-a5f0-93d2be14f247_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அதானி குழும நிறுவனம் சூரியமின் உற்பத்திக்கான சாதனங்களை அமைக்கும் ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கமுதி அருகே எருமைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழி விட்டான் மகன் பெரியசாமி மற்றும் அவரது மகன்களான மணிகண்டன், வழிவிட்ட அய்யனார் உள்ளிட்ட 5 பேர் கடந்த 10–ந்தேதி தங்களது இடத்தை அபகரித்து விட்டதாக செங்கமடை அதானி குழும நிறுவன அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொதுமேலாளர் பர்வீன்குமார் ஜெயினிடம் தகராறு செய்தனராம்.

இதையடுத்து தனது பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பர்வீன்குமார் ஜெயின் கமுதி போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில், கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியையும் அவரது இரு மகன்களையும் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெரியசாமி, அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கரணையில் பாதிரியாரை வெட்டிய 4 பேர் கைது…!!
Next post டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இளம்வயது குற்றவாளி 20-ம் தேதி விடுதலையாவதை தடுக்க முடியாது: டெல்லி ஐகோர்ட்…!!