பாலியல் தொல்லை தொடர்பில் 444 மாணவிகள் ஒரே நேரத்தில் மனு..!!
இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் கையெழுத்திட்டு கேரள உயர்நீதிமன்றில் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல முறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அந்த மனுவில் துன்புறுத்தல் செய்வது, ஆபாசமான முத்திரைகள் காட்டுவது, உடல் ரீதியான மிரட்டல், பொது இடங்களில் கேலி செய்வது என இது போல் பல்வேறு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளும் மற்றும் பொலிஸார் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன.
இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறிய அளவிலான பாதுகாப்பு மட்டுமே அவர்களுக்கு பல்கலைக்கழக அதிகாரிகளால் வழங்கப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகள் இவ்வாறு மனுவை அனுப்பி வைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating