சமயநல்லூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி…!!

Read Time:1 Minute, 20 Second

8e179869-1a9c-4b5e-aa18-2322c1ca8ac0_S_secvpfதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஜம்புதுரகோட்டை அழகம்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவரது மகன் குமார் (வயது35).இவர் இன்று காலை தனது அக்காள் கணவரை மதுரை விமான நிலையத்திற்கு காரில் அழைத்து சென்றார்.

பின்னர் அவரை அங்கு இறக்கி விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென பழுதானது. உடனே ரோட்டோரத்தில் காரை நிறுத்திய குமார், மற்ற வாகனங்கள் கார் மீது மோதமல் இருப்பதற்காக கற்களை வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற லாரி, இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலூர் எஸ்.பி. ஆபீசில் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு…!!
Next post சொத்துக்காக தாயை கழுத்தை நெரித்து கொன்ற மகன்…!!