நடிகை ஷோபனா காதல் திருமணம்
நடிகை ஷோபனா இரண்டு வருடங்களாக காதலித்து வந்த ராகுல் மெஹ்ராவை வரும் ஜனவரியில் திருமணம் செய்து கொள்கிறார். எனக்குள் ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷோபனா, தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் மோகன்லால், சுரேஷ்கோபியுடன் இவர் நடித்த ‘மணிசித்ரதாழ்’ திரைப்படம் (தமிழில் ‘சந்திரமுகி’) இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து, பரதநாட்டியத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார் ஷோபனா. மறைந்த நடிகை நாட்டிய பேரொளி பத்மினி இவரது உறவினர். நாட்டியத்திற்காக எனது வாழ்க்கையை அர்பணித்து விட்டேன், அதனால் திருமணம் என்பது என்னுடைய வாழ்க்கையில் இல்லை என்று சில வருடங்கள் முன்பு கூறினார் ஷோபனா. ஆனால், காதல் ஷோபனாவின் சபதத்தை புரட்டிப் போட்டது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் மெஹ்ராவுடன் இன்டர்நெட் மூலமாக இரண்டாண்டுகளுக்கு முன் ஷோபனாவுக்கு அறிமுகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த அறிமுகம் காதலாகி, இப்போது திருமணத்தில் வந்து நிற்கிறது. ஷோபனா-ராகுல் மெஹ்ரா காதலை இரு வீட்டாரும் அங்கீகரித்ததை அடுத்து, வரும் ஜனவரியில் திருமணம் என நிச்சயத்துள்ளனர். ஷோபனாவின் தனிமையை முடிவுக்கு கொண்டுவந்த இன்டர்நெட்டுக்கே எல்லா புகழும்!