நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம்…!!

Read Time:1 Minute, 33 Second

nisa_தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் மீண்டும் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 5மணிக்கு இலங்கையை சென்றடைந்தார்.

திடீரென நிஷா பிஸ்வால் விஜயம் மேற்கொண்டிருப்பது அரசியல் ரீதியான முக்கிய சந்திப்பிற்காகவே என்று தெரிவிக்கப்படுகிறது. அவரை வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இலங்கை சென்றுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு சென்று அரச தரப்பையும் எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காள அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்…!!
Next post ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு….!!