ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பலத்த பாதுகாப்பு….!!

Read Time:2 Minute, 30 Second

24836646501ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். அதனை முன்னிட்டு யாழ்.நகர் பகுதி பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள வுள்ளார். அதனை அடுத்து வடமாகாண ஆளூநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள உள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்க பட்டு உள்ளது.

அதனை அடுத்து மாலை 3 மணியளவில் யாழ்.நகரில் தனியார் வங்கி ஒன்றினை திறந்து வைக்கவுள்ளார் அதனை அடுத்து யாழ்.மாநகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசிய கிறிஸ்மஸ் கரோல் தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்.வருகையை முன்னிட்டு முன்னரை விட இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த ப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதியை கைத்துப்பாக்கியை காலில் கட்டிய படி நெருங்க முற்பட்ட ஒருவரை பொலிசார் கைது செய்து இருந்தனர்.

பின்னர் குறித்த நபர் சிவில் விமான சேவைகள் அதிகார சபையை சேர்ந்த ஊழியர் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்கே குறித்த நபர் அனுப்பப்பட்டதாகவும் அவரது காலில் கட்டப்பட்டு இருந்தது போலி துப்பாக்கி எனவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிஷா பிஸ்வால் இலங்கைக்கு திடீர் பயணம்…!!
Next post சவுதியில் 12 ஆணிகளை விழுங்க வைத்த கொடூரம்…!!