புலிகள் 12 முறை முயன்றும்; என்னைக் கொல்ல முடியவில்லை! -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!!

Read Time:3 Minute, 20 Second

dakkilas2_thumbnail.gifஎன்னைப் படுகொலை செய்வதற்கு புலிகள் 12 முறை முயன்றும் தோற்றுப்போய்விட்டனர். புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டின் மூலம் என்னைக் கொலை செய்ய முடியாது. இத்தாக்குதலில் எமது நீண்டகால உறுப்பினரான தோழர் ஸ்டீவன் கொல்லப்பட்டதே பெரும் இழப்பாகும் என்று அமைச்சரும், ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமுமாகிய டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அமைச்சரை இலக்கு வைத்து கொழும்பில் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது பற்றி அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது: சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சுக் கட்டிடத்திற்குள் புலிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் இருவர் காயமடைந்தும் உள்ளனர். பெண் குண்டுதாரியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் எமது கொழும்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் தோழர் ஸ்டீவன் பீரிஸ் பலியாகியுள்ளார். அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவரான சித்திரன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார். அதிர்ஷ்ட வசமாக அந்த வேளையில் என்னைச் சந்திக்க வந்திருந்த பொது மக்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. என்னைக் கொலை செய்து தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலை மௌனித்துப் போகச் செய்ய வேண்டுமென்பதே பிரபாகரனின் திட்டமாக இருக்கிறது. இச்சம்பவத்துடன் சுமார் பன்னிரண்டு தடவைகள் நேரடியாகக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவை ஒவ்வொன்றும் படுதோல்வியையே கண்டுள்ளன.

புலிகளின் இவ்வாறான கொலை முயற்சிகள் அவர்கள் ஜனநாயகம், மாற்றுக்கருத்து என்பவற்றைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதையும் தாம் பயங்கரவாதிகள்தான் என்பதையுமே வெளியுலகுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான தாக்குதல்கள் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வுக்காக நாம் புரியும் மக்கள் சேவைக்கு எந்தவகையிலும் தடையாக அமையாது. மாறாக எமது கட்சின் வேலைத்திட்டங்கள் சரியான திசையில் சாத்தியமான அணுகுமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கையையே மேலோங்கச் செய்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்கு வரமாட்டார்கள் – த. சித்தார்த்தன்
Next post நடிகை ஷோபனா காதல் திருமணம்