மைக்ரோஓவனில் வைத்து குழந்தையை கொன்ற பெண்ணுக்கு 26 ஆண்டு ஜெயில் தண்டனை…!!
Read Time:1 Minute, 10 Second
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண் காயங் (34). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருந்தனர். கடைசியாக மிராபெல் தயோ லோ என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது.
சம்பவத்தன்று இக்குழந்தையை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக வைத்தார். இதனால் குழந்தை மிராபெல் உடல் வெந்து பரிதாபமாக இறந்தது.
இச்சம்பவம் கடந்த 2011–ம் ஆண்டு நடந்தது. இதனால் கைது செய்யப்பட்ட காயங் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என உறுதி செய்தது.
இறுதியில் அவருக்கு 26 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ‘‘தனது தீர்ப்பில் இது போன்ற மிக கொடுமையான மோசமான வழக்கை நான் சந்தித்ததில்லை’’ என்றார்.
Average Rating