கொரட்டூர் ரவுடி கொலையில் 4 பேர் கைது…!!

Read Time:2 Minute, 7 Second

98eea06a-7840-437a-ac9c-1cc350b5f38e_S_secvpfசெங்குன்றம் காந்திநகரை சேர்ந்தவர் குமார் (40). ரவுடியான இவர், கொரட்டூரில் தாதங்குப்பம் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

குமாரின் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை யாரோ திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

குமாரின் ஊரைச் சேர்ந்த தாஸ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இக்கொலையை செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தாசின் தம்பி ஆனந்த் (19). அவரது நண்பர்கள் சிவானந்தம் (27), ஆனந்த் (25), சரத் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட குமாரும், தாசும் நண்பர்கள் என்பதும், தாசின் உறவுக்கார பெண்ணை குமார் கையை பிடித்து இழுத்து தவறாக நடந்ததுமே கொலைக்கு காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.

கூலி வேலை செய்து வரும் குமார், கடந்த வாரம் தாசின் வீட்டுக்கு வெள்ளை அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தாசின் அண்ணியிடம் (மனைவியின் சகோதரி) தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாசின் தம்பி ஆனந்தையும் குமார் தாக்கி உள்ளார்.

இதனாலேயே தாஸ் திட்டம் போட்டு குமாருக்கு மது வாங்கி கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி…!!
Next post சவுதியில் கடும் துன்புறுத்தலுக்கு இலக்கான இலங்கை பணிப் பெண் நாடு திரும்பல்…!!