இளம்பெண்ணை மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி: வழிப்பறி கும்பல் வெறிச்செயல்…!!

Read Time:3 Minute, 24 Second

9e9a2838-0587-44ee-a3f2-0bf80a48fd4e_S_secvpfவாணியம்பாடி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் புல்கார்னி. இவரது மகள் புவனேஸ்வரி (24). இவர், வாணியம்பாடி சி.எல். ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

தினமும் இரவு பணி முடிந்தவுடன் புவனேஸ்வரி, அங்குள்ள பாலாற்று மேம்பாலத்தின் வழியாக நடந்தே வீட்டிற்கு செல்வார். இந்த நிலையில் நேற்றிரவு 7.30 மணிக்கு வேலை நேரம் முடிந்தவுடன் வழக்கம் போல் புவனேஸ்வரி வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது, புவனேஸ்வரிக்கு தெரியாமலேயே வழிப்பறி திருடர்கள் 2 பேர் பைக்கில் அவரை பின் தொடர்ந்து சென்றனர். வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.23 ஆயிரம் பணத்தை புவனேஸ்வரி எடுத்து தனது கைப்பையில் வைத்துள்ளார்.

இதனையும் அந்த வழிப்பறி திருடர்கள் கவனித்துள்ளனர். நீண்ட நேரமாக பின் தொடர்ந்து சென்ற 2 பேர் மீதும் புவனேஸ்வரிக்கு சந்தேகம் வரவில்லை. அவர், வீட்டின் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது சென்றபோது வழிப்பறி திருடர்கள் 2 பேரும் திடீரென பைக்கை குறுக்கே நிறுத்தி மறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். ஆனால் அந்த நேரத்தில் அந்த வழியாக யாரும் வரலில்லை. இது வழிப்பறி திருடர்களுக்கு சாதகமாக அமைந்தது.

புவனேஸ்வரியிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் வழிப்பறி திருடர்களிடம் பணத்தை பறிக்கொடுக்காமல் இருக்க அவர் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த வழிப்பறி திருடர்கள் பணப்பையை பறித்து கொண்டு, மேம்பாலத்தில் இருந்து புவனேஸ்வரியை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர்.

15 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் புவனேஸ்வரியின் இடுப்பு எழும்பு முறிந்ததோடு, அவர் படுகாயமடைந்தார்.

நள்ளிரவு முதல் அங்கேயே மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் புவனேஸ்வரியை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தகவலறிந்து வந்த டி.எஸ்.பி. வனிதா, புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தி அறுதல் கூறினார். இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 6 பேர் சிறைப்பிடிப்பு…!!
Next post சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 கட்டிடங்கள் சரிந்து விழுந்தன: 22 பேரை காணவில்லை…!!