பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!!
Read Time:58 Second
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது அல்பிட்டிய தெலிகட பகுதியில் பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரவை மீறி பயணித்த குறித்த வேனிலிருந்த 4 பேரும் கைது செய்ய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
Average Rating