தூக்கில் தொங்கிய நிலை பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது…!!
Read Time:1 Minute, 18 Second
தன்னாமுனை மைலம்பாவெளி சவுக்கடி வீதியைச் சேர்ந்த பிரேமசந்திரன் ஜெனிஸ்வரன் (வயது 10) என்ற சிறுவனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் நேற்று (19/12/2015) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தேவாலயம் ஒன்றிற்கு சென்றிருந்த குறித்த சிறுவனின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் வீடு திரும்புகையில் சிறுவன் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வாரா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating