கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுத்த பெண்…!!

Read Time:1 Minute, 51 Second

8ae82133-4f9f-4446-932a-c6dbe5770001_S_secvpfகிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், குழந்தைகள், மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்வார்கள். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தான் வளர்க்கும் செல்ல நாய்க்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்துள்ளார்.

அவரது பெயர் எம்மா பட்டராஷி. இவர் தனது வீட்டில் சீன வகை நாயை வளர்க்கிறார். அதற்கு பிரின்ஸ் என பெயரிட்டுள்ளார். அந்த நாய்க்கு கிறிஸ்துமஸ் தாத்தா உடை, முத்து, பவளம், மற்றும் மாணிக்க கற்களால் ஆன கழுத்துப்பட்டை, ஆபரணம், கிரீடம் மற்றும் அலங்கார உடைகள் என பரிசளித்துள்ளார். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

பொதுவாக இங்கிலாந்தில் தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு பரிசு பொருட்கள் வழங்க ரூ.3 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. ஆனால் அதை மிஞ்சும் வகையில் தனது செல்ல நாய்க்கு பரிசு பொருட்கள் வழங்கி எம்மா சாதனை படைத்துள்ளார்.

அது குறித்து அவர் கூறும் போது எனது பிரின்சுக்கு (நாய்க்கு) நான் ஒன்றும் பெரிய அளவில் பரிசளிக்கவில்லை. அவனும் எனது குடும்பத்தில் ஒருவன்தான். எனவே அவனுக்கு எனக்கு பிடித்த கிறிஸ்துமஸ் தாத்தா உடையும் வழங்கி இருக்கிறேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் வழக்கில் இஸ்ரேல் மந்திரி ராஜினாமா…!!
Next post குழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…!!