குழந்தையின் பாஸ்போர்ட்டில் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு அபராதம்…!!
இங்கிலாந்தில் குழந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை வைத்து அந்த குழந்தையின் தாயை துபாய்க்கு ஏற்றிவந்த பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு துபாய் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
லாகூர் நகரில் இருந்துவந்த அப்ஷான் சித்திக்கி என்ற அந்தப் பெண் துபாய் வந்திறங்கியதும் விமான நிலையத்தில் இருந்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை வாங்கிப் பார்த்தபோது அதில் சிறுகுழந்தையின் பெயரும் புகைப்படமும் இருந்ததையும், அது இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதையும் கண்டு திடுக்கிட்டனர். அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்ட அதிகாரிகள், பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பினர்.
அவரிடம் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உரிய பாஸ்போர்ட் இருக்கிறதா? என்பதைக்கூட ஆய்வு செய்யாத பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏலைன்ஸ் நிறுவனத்துக்கு 1,361 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating