மீனம்பாக்கத்தில் விமான பணிப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!
மீனம்பாக்கம், ஏர் இண்டியா காலனி குடியிருப்பில் வசித்து வருபவர் அணுப்நாயர். இவரது மனைவி தன்பிரீத் சிங்பால் (வயது32). ஏர் இண்டியா விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளாள்.
நேற்று மாலை தன்பிரீத் சிங்பால் தனது மகளை அருகில் உள்ள தாய் வீட்டில் விட்டு விட்டு பணிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.
இந்த நிலையில் அணுப் நாயர் இரவு வீட்டிற்கு திரும்பி வந்த போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். கதவை உடைத்து திறந்த போது மின் விசிறியில் தன்பிரீத் பால்சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மீனம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தன்பிரீத் பால்சிங் தற்கொலைக்கு வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்று விசாரணை நடந்து வருகிறது.
Average Rating