மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டம்…!!
Read Time:54 Second
மேல் மாகாணத்தில் மூன்று நாள் டெங்கு ஒழிப்புத்திட்டம் இன்று முதல் (21) ஆரம்பமாகின்றது.
சுகாதார அமைச்சின் 28 சுகாதார பரிசோதக அலுவலகங்களிலிருந்து 426 குழுக்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்துக்குள் 27,696 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 54 உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இவற்றுள் 52.1 சதவீதமான பதிவுகள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating