சிசுவை கொலை செய்த தாய், மன அழுத்தமே காரணம்..!!

Read Time:3 Minute, 35 Second

download (1)பொரல்ளை காசல் மருத்துவமனையில் 14 நாட்களேயான பெண் சிசுவை தாய் கொலை செய்தமைக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் மன அழுத்தமே காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த 34 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த தாய் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னதாக காசல் மருத்துவ மனையில் காய்ச்சல் அவசர சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சிசுவின் தாய் அனுமதிக்கப்பட்டார்.

சிசு பிறந்து சில நாட்களேயான நிலையில் தாயின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் போதே குறித்த பெண் சிசுவை கொலை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, ஊருகஸ்மங்ஹந்தி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கொத்து ரொட்டி ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், உணவு ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என பின்னர் தெரியவந்துள்ளது.

வாயுத் தொல்லைக்கான திரவ மருந்தை அருந்திய போது சுவாசக் குழாயில் திரவம் சென்றமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

update………….
பொரல்லை காசல் மருத்துவமனையில் 14 நாட்களேயான சிசுவை தாய் ஒருவர் கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த தாய் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னதாக காசல் மருத்துவ மனையில், சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சிசுவின் தாய் அனுமதிக்கப்பட்டார்.

சிசு பிறந்து சில நாட்களேயான நிலையில் தாயின் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் போதே குறித்த பெண் சிசுவை கொலை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாய், புது கடை பிரதான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 31 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புகையிரதம் முன் பாய்ந்து இளைஞன் தற்தொலை..!!
Next post இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் நிலநடுக்கம்..!!